Friday, July 30, 2010

பாரதி

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
--------------பாரதி-----------------

1 comment:

  1. அம்மா

    என்னை இந்த உலகுக்கு
    அறிமுகபடுத்தியவள் . . .

    என் முதல்
    தோழியும் கூட . . .

    என் செல்ல
    குறும்புகளை
    செல்லமாய்
    திட்டியபடி
    ரசிப்பவள் . . .

    இந்த உலகத்தில்
    ஒருவர் மட்டுமே
    உனக்கு துணையென
    இறைவன் சொன்னால்
    இவள் தான்
    என்
    இனிய
    துணை . . .

    அம்மாவின்
    அன்புக்கு
    இணை
    என்றுமே
    உலகில் இல்லை . . .

    ReplyDelete